பிளேட்டோவின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

பிளேட்டோவின் பொன்மொழிகள்

Plato

உலகின் தலைசிறந்த தத்துவஞானிகளில் ஒருவரும், கணிதவியல் வல்லுனரும், சாக்ரடீஸின் சீடரும் மற்றும் அரிஸ்டாட்டிலின் குருவும்தான் பிளேட்டோ (Plato). கிரேக்கத்தில் பல தத்துவஞானிகள் தோன்றியிருந்தாலும் அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராகவும் மிகவும் புகழ்மிக்க அறிஞராகவும் திகழ்கிறார் பிளேட்டோ.

மேலும் மேற்கு உலகின் முதற் பள்ளிக்கூடமான கெக்காடமஸ் (Hecademus) என்ற பள்ளியை ஏதென்ஸ் நகரில் நிறுவியவரும் இவரே. மக்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார் பிளேட்டோ (Plato). அதில் குறிப்பாக அரசியல் கருத்துக்களும் உள்ளடங்கும்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


 

Plato quotes in Tamil

 

  • யதார்த்தம் மனதினால் உருவாக்கப்பட்டது, நம் மனதை மாற்றுவதன் மூலம் நம் யதார்த்தத்தை மாற்ற முடியும்.

 

  • நீங்கள் உங்கள் அரசின் விவகாரங்களில் அக்கறை காட்டவில்லை என்றால், முட்டாள்களின் ஆட்சியின் கீழ் நீங்கள் வாழ நேரிடும்.

 

  • உண்மையைப் பேசுபவனை விட வேறு யாரும் அதிகமாக வெறுக்கப்படுவதில்லை.

 

  • பொதுவாக சரியான பதிலை விட சரியான கேள்வி மிகவும் முக்கியமானது.

 

  • மனித நடத்தை மூன்று முக்கிய மூலங்களிலிருந்து ஊற்றெடுக்கின்றது: ஆசை, உணர்ச்சி மற்றும் அறிவு.

 

 

  • ஞானத்தை விரும்புவோர் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் வரை, அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் ஞானத்தை விரும்புவோராக மாறும் வரை, மனிதகுலம் ஒருபோதும் சிக்கலுக்கு முடிவைக் காணாது.

 

  • நான் ஒரு உயிருள்ள புத்திசாலி மனிதன், ஏனென்றால் எனக்கு ஒரு விடயம் தெரியும், அது என்னவென்றால் எனக்கு எதுவும் தெரியாது.

 

  • அதிகாரத்தை விரும்பாதவனே அதை அடையத் தகுதியானவன்.

 

  • வறுமை வருவது செல்வம் குறைவதால் அல்ல, ஆசைகள் அதிகரிப்பதால் தான்.

 

  • எவ்வளவு மெதுவாக இருந்தாலும், தொடர்ந்து முன்னேறும் எவரையும் ஒருபோதும் நம்பிக்கை இழக்கச் செய்யாதீர்கள். அந்த ஒருவர் நீங்களே என்றாலும்.

 

  • நன்மை செய்வதிலிருந்தும் மற்றவர்களுக்கு உதவுவதிலிருந்தும் மகிழ்ச்சி உருவாகிறது.

 

  • அரசியலில் பங்கேற்க மறுத்ததற்காக தண்டனைகளில் ஒன்று, நீங்கள் உங்களை விட தகுதி குறைந்தவர்களால் ஆளப்படுவீர்கள்.

 

  • அழகு என்பது பார்ப்பவரின் கண்களில் உள்ளது.

 

  • தனக்கு என்ன தெரியாது என்பதை அறிந்தவனே புத்திசாலி.

 

  • கற்றலின் முதல் படி மனிதனின் அகந்தையை அழிப்பதாகும்.

 

  • கொடுங்கோன்மையானது ஜனநாயகத்திலிருந்து இயற்கையாகவே எழுகிறது.

 

  • ஒரு கெட்ட நண்பனை விட ஒரு நல்ல எதிரியே மேலானது.

 

  • கட்டாயத்தினால் பெறப்பட்ட அறிவு மனதில் பதியாது.

 

  • ஒரு புத்திசாலி எப்பொழுதும் தன்னை விட சிறந்த ஒருவருடன் இருக்க விரும்புவார்.

 

  • ஒரு பெரிய வேலையை அரைகுறையாகச் செய்து முடிப்பதை விட, ஒரு சிறிய வேலையை நன்றாகச் செய்து முடிப்பது சிறந்தது.

 

  • உங்கள் பெற்றோருடன் சண்டை போடாதீர்கள். நீங்கள் சரியாக இருந்தாலும் கூட.

 

  • எந்தவொரு மனிதனும் எளிதில் தீங்கு செய்யலாம், ஆனால் எல்லா மனிதனாலும் இன்னொருவருக்கு நல்லது செய்ய முடியாது.

 

  • ஒரு மனிதன் பல கலைகளை வெற்றிகரமாகப் பழக முடியாது.

 

 

  • என்னை விமர்சிப்பவர்கள் பொய்யர்கள் என்பதை நான் என் வாழ்க்கையால் நிரூபிப்பேன்.

 

  • தேவையே உண்மையில் கண்டுபிடிப்பின் தாய்.

 

  • எங்கே அன்பு ஆட்சி செய்கிறதோ, அங்கே சட்டங்கள் தேவையில்லை.

 

  • பூமிக்கு அடியில் இருக்கும் தங்கம் அல்லது பூமியில் இருக்கும் தங்கம் அனைத்தும் நல்லொழுக்கத்திற்கு ஈடாக கொடுக்க போதுமானதாக இல்லை.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (Android App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.