புளோரன்ஸ் நைட்டிங்கேலின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பொன்மொழிகள்

Florence Nightingale

18 ஆம் நூற்றாண்டில் சமூகத்தால் பெரிதும் மதிக்கப்படாமல் ஒரு சமையல்காரர் தொழில் போல் இருந்த தாதியர் சேவையை சமூகத்தில் மிகவும் மதிப்பு மிக்க சேவையாக மாற்றியவரும், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய பெருமைக்குச் சொந்தமானவரும் தான் இங்கிலாந்தைச் சேர்ந்த தாதி புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale).

மேலும் தாதியருக்கான பயிற்சிப் பள்ளியை முதன் முதலில் தொடங்கியவரும் இவரே. இரவு நேரங்களில் கையில் விளக்குடன் சென்று நேயாளிகளை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்ததால் இவரை விளக்கேந்திய சீமாட்டி (The Lady with the Lamp) என்றும் அழைக்கின்றனர். இவரது சேவைக்காக 1883 இல் விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருதும் (Royal Red Cross Award) வழங்கப்பட்டது.

இவரை கெளரவிக்கும் முகமாகத்தான் உலகத் தாதியர் தினம் (International Nurses Day) புளோரன்ஸ் நைட்டிங்கேலின் (Florence Nightingale) பிறந்த நாளான மே 12 இல் கொண்டாடப்படுகிறது. தாதியர் சேவையில் அளப்பெரிய மாற்றங்களை கொண்டுவந்ததன் மூலம் இன்று பல பேரின் வாழ்க்கையை மீட்டுக்கொண்டுவர காரணமாகத் திகழும் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் கருத்துக்களை இந்தப் பதிவில் காணலாம்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


 

Florence Nightingale quotes in Tamil

 

  • இயற்கை மட்டுமே குணப்படுத்துகிறது. செவிலியர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், இயற்கை அவர் மீது செயல்பட நோயாளியை சிறந்த நிலையில் வைப்பதே.

 

  • அழகின் குணப்படுத்தும் ஆற்றலை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

 

  • ஒரு மருத்துவமனையில் முதல் தேவை என்னவென்றால், அது நோயாளிகளுக்கு எந்தத் தீங்கும் செய்யக்கூடாது.

 

  • அடுத்த கிறிஸ்து அநேகமாக ஒரு பெண் கிறிஸ்துவாக இருப்பார்.

 

  • மதம் எனக்கு முக்கியமானது,  நானும் என் குடும்பமும் தீவிர மதவாதிகள். நான் செய்த வேலை கடவுளிடமிருந்து வந்த அழைப்பு என்று நான் நம்புகிறேன்.

 

  • இன்னும் நான் தகுதியானவள் இல்லை, ஆயினும் பயிற்சி பெற்ற செவிலியர் என்று என்னை அழைப்பதற்கு நான் தகுதியுள்ளவளாக வாழ்வேன்.

 

  • ஒரு நோயாளியின் அறையிலோ அல்லது படுக்கை அறையிலோ ஒருபோதும் யன்னல்கள் மூடப்படக்கூடாது.

 

  • எங்களை நாங்கள் ஒருபோதும் முழுமையான செவிலியர்களாகக் கருதக் கூடாது. எங்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

 

  • எங்கள் முதற் பயணம் எங்களுக்கான அந்த சிறந்த இடத்தைக் கண்டுபிடிப்பதற்காகும்.

 

  • ஒரு நோயாளிக்கு சளிப்பிடித்து இருந்தால், ஒரு நோயாளிக்கு காய்ச்சல் இருந்தால், ஒரு நோயாளி மயக்கம் அடைந்தால், உணவு உண்டபின் நோய்வாய்ப்பட்டால், அவருக்கு படுக்கை புண் இருந்தால், அது பொதுவாக நோயின் தவறு அல்ல, ஆனால் செவிலியரின் தவறு.

 

  • ஒரு மருத்துவமனை நோயாளிகளுக்கு எந்தத் தீங்கும் செய்யக்கூடாது என்பதை அதன் முதல் தேவையாக அறிவிப்பது ஒரு விசித்திரமான கொள்கையாகத் தோன்றலாம். எனினும் இதுபோன்ற ஒரு கொள்கையை முன்வைப்பது மிகவும் அவசியம்.




உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.