ஜோசப் அடிசனின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
ஜோசப் அடிசனின் பொன்மொழிகள்
இங்கிலாந்தைச் சேர்ந்த கவிஞரும், நாடக ஆசிரியரும் மற்றும் அரசியல்வாதியும்தான் ஜோசப் அடிசன் (Joseph Addison). இவரது கவிதைகளுக்காகவும், நாடகங்களுக்காகவும் இவர் பிரபலமாக அறியப்படுகிறார்.
"மார்கஸ் போர்சியஸ் கேட்டோ யுடிசென்சிஸின்" கடைசி நாட்களை அடிப்படையாகக் கொண்டு 1712 இல் ஜோசப் அடிசன் எழுதிய "கேட்டோ எ ராயெடி" எனும் நாடகம் இவரது மிக பிரபலமான படைப்பாகும்.
இணைய இணைப்பு இன்றி (Without Internet) பொன்மொழிகளைப் படிக்க தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Joseph Addison quotes in Tamil
- நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பினால், விடாமுயற்சியை உங்கள் ஆருயிர் நண்பராகவும், அனுபவத்தை உங்கள் புத்திசாலித்தனமான ஆலோசகராகவும், எச்சரிக்கை உணர்வை உங்கள் மூத்த சகோதரனாகவும், நம்பிக்கையை உங்கள் திறமையான பாதுகாவலராகவும் ஆக்குங்கள்.
- மற்றவரின் சுமையை குறைக்கும் ஒருவரை விட இவ்வுலகில் யாரும் அதிகம் போற்றப்பட மாட்டார்கள்.
- நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில் மிகப் பெரிய ஆற்றல் உள்ளது.
- மனிதன் சிரிக்கும் திறனால் மற்ற எல்லா உயிரினங்களிலிருந்தும் தனித்து நிற்கிறான்.
- இளைஞர்கள் விரைவில் அவமதிக்கிறார்கள் மற்றும் விரைவில் மறந்துவிடுகிறார்கள், முதுமையில் இரண்டும் மெதுவாக நடக்கிறது.
- நம் உண்மையான ஆசீர்வாதங்கள் பெரும்பாலும் வலிகள், இழப்புகள் மற்றும் ஏமாற்றங்களின் வடிவில்தான் நமக்குத் தோன்றும், ஆனால் நாம் பொறுமையாக இருந்து விரைவில் அவற்றின் சரியான வடிவங்களைக் காண்போம்.
- நீதியைப் போல உண்மையிலேயே சிறந்த தெய்வீகமான நற்குணம் எதுவும் இல்லை.
- அறிவுதான் உண்மையில் நல்லொழுக்கத்திற்கு அடுத்தபடியாக உண்மையாகவும் அடிப்படையிலும் ஒரு மனிதனை இன்னொருவருக்கு மேலாக உயர்த்துகிறது.
- எழுத்தாளர்களால் ஒருவர் மற்றவரின் படைப்புகளில் உள்ள அழகைக் கண்டறிவது சாத்தியமில்லை, அவர்களது கண்கள் புள்ளிகளையும் கறைகளையும் மட்டுமே காண்கின்றன.
- உடலுக்கு உடற்பயிற்சி போல மனதிற்கு வாசிப்பு.
- அதிகாரம் அல்லது ஆதிக்கத்தை விட மனிதனின் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியது எதுவுமில்லை.
- இயற்கை நோக்கம் இல்லாமல் அல்லது பயனற்ற எதையும் செய்யாது.
- மகிழ்ச்சியானது ஆரோக்கியத்தின் மிகச் சிறந்த ஆதரவாளனாகும். மேலும் உடலைப் போலவே மனதுக்கும் நட்பாக இருக்கிறது.
- இந்த உலகில் ஒரு மனிதன் அனுபவிக்கக்கூடிய மிகப்பெரிய ஆசீர்வாதம் நிறைவான மனது.
- அழகை விட ஆன்மாவிற்குள் நேரடியாகச் செல்லும் வழி எதுவுமில்லை.
- அடக்கம் ஒரு ஆபரணம் மட்டுமல்ல, நல்லொழுக்கத்திற்கான காவலுமாகும்.
- ஒரு மனிதனின் அறிவின் உச்ச அளவு, அவனுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதுதான்.
- மனித வாழ்க்கையின் மிகச்சிறந்த இனிமை நட்பு.