மாவீரன் நெப்போலியனின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

மாவீரன் நெப்போலியனின் பொன்மொழிகள்

Napoleon Bonaparte

பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனும், பிரெஞ்சுப் புரட்சியின் தளபதியும், பிரெஞ்சுக் குடியரசின் பேரரசனும் மற்றும் இத்தாலியின் மன்னனும்தான் முதலாம் நெப்போலியன் என்று அழைக்கப்படும் நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte).

தான் சந்தித்த பல போர்களிலும் வெற்றி பெற்று தான் ஒரு மாவீரன் என நிறுவியவன் நெப்போலியன். இந்த உலக வரலாற்றில் மாவீரர்களுக்கு எப்பொழுதும் ஓர் தனி இடமுண்டு. அந்த இடத்துக்கு முற்றிலும் தகுதியான மாவீரன் தான் நெப்போலியன்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link



Napoleon Bonaparte quotes in Tamil


  • அசாத்தியம் என்பது முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணப்படும் வார்த்தை. புத்திசாலிகள் தங்களுக்கான வாய்ப்புகளை தாங்களே உருவாக்கி எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறார்கள்.


  • நீங்கள் ஒரு விடயத்தை நன்றாகச் செய்ய விரும்பினால், அதை நீங்களே செய்யுங்கள்.


  • ஒரு ஆணுக்கு ஆறு மணி நேர தூக்கம், ஒரு பெண்ணுக்கு ஏழு மணி நேர தூக்கம், ஒரு முட்டாளுக்கு எட்டு மணி நேர தூக்கம்.


  • நீங்கள் 100 சிங்கங்கள் கொண்ட ஒரு படையை உருவாக்கி அதன் தலைவர் ஒரு நாயாக இருந்தால், எந்த சண்டையிலும் சிங்கங்கள் நாயைப் போல இறக்கும். ஆனால் நீங்கள் 100 நாய்கள் கொண்ட ஒரு படையை உருவாக்கி அதன் தலைவர் ஒரு சிங்கமாக இருந்தால், எல்லா நாய்களும் சிங்கத்தைப் போல சண்டையிடும்.


  • வெற்றி என்பது எப்போதும் போரில் வெல்வதில்லை. ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதே வெற்றி.


  • உங்கள் எதிரி ஒரு தவறு செய்யும் போது ஒருபோதும் குறுக்கிடாதீர்கள்.


  • அனைவரையும் ஏழைகளாக்குவதற்கான சிறந்த வழி, செல்வத்தின் சமத்துவத்தை வலியுறுத்துவதுதான்.


  • நீங்கள் உங்கள் சிறகுகளை விரிக்கும் வரை, உங்களால் எவ்வளவு தூரம் பறக்க முடியும் என்று உங்களுக்கே தெரியாது.


  • மதத்தின் நோக்கம் ஏழைகள் பணக்காரர்களைக் கொல்வதைத் தடுப்பதாகும்.


  • முகஸ்துதி செய்யத் தெரிந்தவனுக்கு அவதூறு பேசவும் தெரியும்.


  • ஒரு மனிதனைப் புரிந்து கொள்வதற்கு, அவன் இருபது வயதில் இருந்த போது இந்த உலகில் என்ன நடந்தது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.


  • பெரும் விடாமுயற்சி கொண்டவருக்கே வெற்றி சொந்தமானது.


  • வரலாறு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்களின் தொகுப்பு.


  • நீங்கள் ஒரு எதிரியுடன் அடிக்கடி சண்டையிடக்கூடாது, இல்லையெனில் நீங்கள் உங்கள் போர்க் கலை அனைத்தையும் அவருக்குக் கற்பிப்பீர்கள்.


  • உண்மையான மனிதன் யாரையும் வெறுப்பதில்லை.


  • தீவிரமாகவும் ஆர்வமாகவும் நீங்கள் எதை விரும்பினாலும், அதை நீங்கள் அடைவீர்கள்.


  • இந்த உலகம் மிகவும் பாதிக்கப்படுவது கெட்டவர்களின் வன்முறையால் அல்ல. நல்லவர்களின் மௌனத்தால்.


  • ஏழையாக இருப்பதற்கான மிக உறுதியான வழி நேர்மையான மனிதனாக இருப்பதுதான்.


  • புலன்களுக்கும் மனதுக்கும் இடையேயான தொடர்பை தன் விருப்பப்படி இடைமறிக்கக்கூடியவரே வலிமையானவர்.


  • பொறுமையின்மை வெற்றிக்கு மிகப்பெரும் தடையாகும்.


  • வரலாறு வெற்றியாளர்களால் எழுதப்பட்டது.


  • ஒரு தலைவரின் பணி யதார்த்தத்தை விவரிப்பது, பின்னர் நம்பிக்கையை அளிப்பது.


  • மக்களை வழிநடத்துவதற்கான ஒரே வழி அவர்களுக்கு எதிர்காலத்தைக் காண்பிப்பதாகும்.


  • அரசியலில் முட்டாள்தனம் என்பது ஒரு குறைபாடு அல்ல.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.

iOS App Link

Android App Link