ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் பொன்மொழிகள்

George Bernard Shaw

அயர்லாந்தைச் சேர்ந்த நாடக ஆசிரியரும், விமர்சகரும் மற்றும் அரசியல் ஆர்வலரும்தான் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா (George Bernard Shaw). இவர் கிட்டத்தட்ட  60க்கு மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். மேலும் இவரின் விடோவர்ஸ் ஹௌசஸ் (Widowers' Houses), த டெவில்ஸ் டிஸ்ஸைப்பிள் (The Devil's Disciple), ஆம்ஸ் அண்ட் த மேன் (Arms and the Man) போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

இவரின் நகைச்சுவை மிகுந்த நாடகங்களால் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான மனிதராகத் திகழ்ந்தார் பெர்னார்ட் ஷா. மேலும் இவரின் படைப்புகளுக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசையும், பிக்மேலியன் (Pygmalion) என்ற திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளார். மேலும் நாவல்கள், சிறு கதைகள், கட்டுரைகள் போன்ற பல படைப்புகளையும் உருவாக்கியுள்ளார்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


 

George Bernard Shaw quotes in Tamil

 

  • மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது, மனதை மாற்ற முடியாதவர்களால் எதையும் மாற்ற முடியாது.

 

  • வரலாற்றிலிருந்து நாங்கள் எதையுமே கற்றுக்கொள்வதில்லை என்பதை நாங்கள் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.

 

  • இதைச் செய்யவே முடியாது என்று கூறும் நபர்கள் அதைச் செய்பவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது.

 

  • புத்திசாலித்தனமாகச் செயல்படும் ஒரே நபர் எனது தையல்காரர் மட்டுமே. அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் எனது அளவை புதிதாக எடுத்துக்கொள்கிறார். மற்றவர்கள் அனைவரும் தங்கள் பழைய அளவீடுகள் மூலமே செயற்படுகிறார்கள்.

 

  • தவறான அறிவைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், இது அறியாமையை விட மிகவும் ஆபத்தானது.

 

  • வாழ்க்கை என்பது உங்களை நீங்களே கண்டுபிடிப்பதைப் பற்றியது அல்ல, வாழ்க்கை என்பது உங்களை நீங்களே உருவாக்குவதைப் பற்றியது.

 

  • சரியான வாய்ப்புக்காக காத்திருக்காதீர்கள், அதை உருவாக்குங்கள்.

 

  • எங்களுக்கு வயதாகிவிட்டதால் நாங்கள் விளையாடுவதை நிறுத்தவில்லை, விளையாடுவதை நிறுத்துவதால் நாங்கள் வயதாகிறோம்.

 

  • நம்பிக்கையாளர்கள் மற்றும் அவநம்பிக்கையாளர்கள் இருவருமே சமூகத்திற்கு பங்களிப்பு செய்கிறார்கள். நம்பிக்கையாளர் விமானத்தை கண்டுபிடிக்கிறார், அவநம்பிக்கையாளர் பாராசூட்டைக் கண்டுபிடிக்கிறார்.

 

  • உங்கள் சோகமான தருணங்களை மணலில் எழுதுங்கள், உங்கள் நல்ல தருணங்களை கல்லில் எழுதுங்கள்.

 

  • ஒரு பன்றியுடன் ஒருபோதும் மல்யுத்தம் செய்யக்கூடாது என்பதை நான் நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக்கொண்டேன், செய்தால் நீங்கள் அழுக்காகிவிடுவீர்கள், மேலும் பன்றி அதை விரும்புகிறது.

 

  • நம்பிக்கையை இழக்காதீர்கள், நீங்கள் ஒரு வெற்றிக் கதையாக இருப்பீர்கள் என்று உங்களுக்கு நீங்களே உறுதியளியுங்கள், பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளும் உங்களுக்கு உதவுவதற்காக ஒன்றுசேரும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

 

  • 20 வயதில் நீங்கள் ஒரு பொதுவுடைமைவாதியாக இல்லை என்றால் உங்களுக்கு இதயம் இல்லை. 30 வயதில் நீங்கள் ஒரு முதலாளித்துவவாதியாக இல்லை என்றால் உங்களுக்கு மூளை இல்லை.

 

  • ஒரு சமவுடைமைவாதி என்பவர் தன்னிடம் எதுவும் இல்லாத ஒருவர், மேலும் அதை எல்லோரிடமும் சமமாகப் பங்கிடத் தயாராக உள்ளவர்.

 

  • செய்ய வேண்டியதைச் செய்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராமல் இருக்கலாம், ஆனால் அது உங்களைச் சிறந்தவராக மாற்றும்.

 

  • இந்த உலகின் முன்னேற்றம் உங்கள் வயதில் மூத்தவர்களை விட, நீங்கள் நன்கு அறிந்து கொள்வதைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

  • ஒரு மருத்துவரிடம் தடுப்பூசி பற்றி விவாதிப்பது, சைவ உணவைப் பற்றி  ஒரு இறைச்சிக் கடைக்காரரிடம் விவாதிப்பதைப் போன்றது.

 

  • எங்கள் தேவைகள் மிகக் குறைவானவை, ஆனால் எங்கள் விருப்பங்கள் எல்லையற்றவை.

 

  • செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். அது மகிழ்ச்சியானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது மகத்துவமானது.

 

  • உண்மையைச் சொல்வதற்கு இருபது வழிகளும், பொய்யைச் சொல்வதற்கு ஒரே ஒரு வழியும் இருந்தால், அரசாங்கம் அந்த ஒரு வழியைக் கண்டுபிடிக்கும். பொய்களைச் சொல்வது அரசாங்கங்களின் இயல்பு.

 

  • மனவேதனையைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா இல்லையா என்று யோசிக்கக் கூட போதுமான ஓய்வு இல்லாமல் இருந்தலாகும்.

 

  • வயதானவர்கள் ஆபத்தானவர்கள், இந்த உலகிற்கு என்ன நடக்கப்போகிறது என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.

 

  • அனுபவத்திலிருந்து மனிதர்கள் எதையுமே கற்றுக்கொள்வதில்லை என்பதை நாங்கள் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்கிறோம்.

 

  • ஒரு நாள் உங்கள் எதிரியாக மாறக்கூடிய ஒரு நபரைப் போல உங்கள் நண்பரை நடத்துங்கள், ஒரு நாள் உங்கள் நண்பராக மாறக்கூடிய ஒரு நபரைப் போல உங்கள் எதிரியை நடத்துங்கள்.

 

  • ஏழையாக இருக்கக்கூடாது என்பதே ஒவ்வொரு மனிதனின் முதல் கடமையாகும்.

 

  • நான் ஒரு நாத்திகவாதி, அதற்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.

 

  • உங்கள் அடியைத் திருப்பித் தராத மனிதனைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர் உங்களை மன்னிப்பதுமில்லை, உங்களை நீங்களே மன்னிக்க அனுமதிப்பதுமில்லை.

 

  • ஒரு மனிதன் ஒரு புலியைக் கொல்ல விரும்பினால், அவன் அதை வேட்டை என்று அழைக்கிறான். ஒரு புலி அவனைக் கொல்ல விரும்பினால், அவன் அதை மூர்க்கத்தனம் என்று அழைக்கிறான்.

 

  • பணத்தைக் கையாளத் தெரியாத ஒரு மனிதனைக் கெடுக்க உறுதியான வழி அவனுக்கு கொஞ்சம் பணத்தைக் கொடுப்பதாகும்.

 

  • முட்டாள்கள் மட்டுமே ஒரே விடயங்களை மீண்டும் மீண்டும் செய்து, வெவ்வேறு முடிவுகளைப் பெறுவதற்கு எதிர்பார்க்கிறார்கள்.

 

  • கற்பனையே படைப்பின் ஆரம்பமாகும்.

 

  • நம் சமூகத்திற்கு ஆபத்தானது அவநம்பிக்கை அல்ல, நம்பிக்கையே.

 

  • தீமைகளில் மிகப்பெரியது மற்றும் குற்றங்களில் மிக மோசமானது வறுமை.

 

  • இந்த உலகில் எதுவும் தவறாக இல்லை என்றால், நாங்கள் செய்வதற்கு எதுவும் இருக்காது.

 

  • எல்லோரும் தன்னைப் போலவே மோசமானவர் என்று நினைத்து, அதற்காக அவர்களை வெறுக்கும் ஒரு மனிதனே அவநம்பிக்கையாளர்.

 

  • பணப் பற்றாக்குறையே எல்லாத் தீமைகளுக்கும் மூலகாரணமாகும்.


  • ஒரு முட்டாளின் முட்டாள்தனத்திற்கு ஏற்ப நீங்கள் பதிலளிப்பதைப் போல, சில சமயங்களில் நீங்கள் ஒரு பெண்ணின் பெண்மைக்கு ஏற்ப பதிலளிக்க வேண்டும்.


  • முதற் காதல் என்பது சிறு முட்டாள்தனமும் நிறைய ஆர்வமும் மட்டுமே.


  • சந்தேகத்திற்கு இடமின்றி விவசாயம் மட்டுமே பயனுள்ள தொழிலாகும்.


  • மனிதனால் மிக உயர்ந்த சிகரங்களில் கூட ஏற முடியும், ஆனால் அவனால் அங்கேயே நீண்ட காலம் தங்க முடியாது.


  • ஒரு மருத்துவரின் நன்மதிப்பு அவரின் கவனிப்பின் கீழ் இறக்கும் பிரபலமான மனிதர்களின் எண்ணிக்கையால் உருவாக்கப்படுகிறது.


உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.