தீபக் சோப்ராவின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

தீபக் சோப்ராவின் பொன்மொழிகள்

Deepak Chopra

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல அமெரிக்க எழுத்தாளர் தான் தீபக் சோப்ரா (Deepak Chopra). இவர் 1946 இல் இந்தியாவின் புதுடில்லியில் பிறந்தவர், தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இவரது எழுத்துகளுக்காகவும் பேச்சுகளுக்காகவும் இவர் அமெரிக்காவில் பிரபலமான நபராக உள்ளார். குவாண்டம் ஹீலிங் (Quantum Healing), த புக் ஒப் சீக்ரட் (The Book of Secrets), த பாத் டூ லவ் (The Path to Love) போன்றன இவரது பிரபலமான புத்தகங்களாகும்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link



Deepak Chopra quotes in Tamil


  • நீங்கள் மேற்கொள்ளும் மிகவும் ஆக்கப்பூர்வமான செயல் உங்களை நீங்களே உருவாக்கும் செயல்தான்.


  • தியானம் என்பது உங்கள் மனதை அமைதிப்படுத்துவதற்கான ஒரு வழி அல்ல. அது ஏற்கனவே அங்கே இருக்கும் அமைதிக்குள் நுழைவதற்கான ஒரு வழியாகும்.


  • நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், மற்றவரை மகிழ்ச்சிப்படுத்துங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சரியான நபரைக் கண்டுபிடிக்க விரும்பினால், நீங்கள் சரியான நபராக இருங்கள். நீங்கள் இந்த உலகில் மாற்றத்தைக் காண விரும்பினால், நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்களே மாறுங்கள்.


  • ஒவ்வொரு தோல்வியிலும் வெற்றிக்கான விதைகள் உள்ளன.


  • உங்களுக்காக நீங்கள் கனவு கண்டதை விட மிகப் பெரிய திட்டங்களை பிரபஞ்சம் உங்களுக்காக வைத்துள்ளது.


  • ஒரு குழந்தையைப் போல எந்த காரணமும் இன்றி மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஒரு காரணத்திற்காக மகிழ்ச்சியாக இருந்தால், நீங்கள் சிக்கலில் உள்ளீர்கள், ஏனெனில் அந்த காரணம் உங்களிடமிருந்து பறிக்கப்படலாம்.


  • வாழ்க்கையில் சரியான தேர்வுகளைச் செய்வதற்கு, நீங்கள் உங்கள் ஆன்மாவுடன் தொடர்பு கொள்ள வேண்டும். இதைச் செய்ய, நீங்கள் தனிமையை அனுபவிக்க வேண்டும்.


  • உடல் மனதை உருவாக்குவதில்லை, மனம்தான் உடலை உருவாக்குகிறது.


  • எனது ஒவ்வொரு எண்ணத்திற்கும் காயப்படுத்தும் அல்லது குணப்படுத்தும் சக்தி உள்ளது. நான் என் எண்ணங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவேன், அவற்றின் சக்தியை மதிப்பேன்.


  • மொழி யதார்த்தத்தை உருவாக்குகிறது. வார்த்தைகளுக்கு சக்தி உண்டு.


  • உங்கள் பிள்ளைகளை மாற்றுவதற்கு உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் வழங்கக்கூடிய மூன்று விடயங்கள்: கவனம், பாராட்டு மற்றும் பாசம்.


  • உங்கள் உள்ளார்ந்த தெய்வீகத்தன்மையைக் கண்டறிவதே உண்மையான வெற்றியாகும்.


  • உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு மக்களை மாற்ற முயற்சிப்பதற்குப் பதிலாக நீங்கள் அவர்களை ஏற்றுக்கொண்டால், உங்கள் உறவுகள் முழுமையாக மலரும்.


  • அனைத்து இலக்குகளினதும் இறுதி இலக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் மற்றவரை மகிழ்வியுங்கள்.


  • நீங்களே குடும்பத்தின் மிக முக்கியமான அங்கம். முதலில் உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் மற்றவர்களை இன்னும் சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும்.


  • கடந்த காலம் என்பது கடந்துபோய்விட்டது, எதிர்காலம் என்பது இங்கே இல்லை, இப்போது நான் இரண்டிலிருந்தும் விடுபட்டுள்ளேன், இப்போது நான் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கிறேன்.


  • நீங்கள் ஒரு தேர்வு செய்யும் போது, நீங்கள் எதிர்காலத்தை மாற்றுகிறீர்கள்.


  • தியானம் என்பது மனதைத் தூய்மைப்படுத்துவதற்கும் அமைதிப்படுத்துவதற்குமான ஒரு முக்கிய வழியாகும்.


  • இந்தக் கணத்தில் நடக்கும் அனைத்தும் கடந்த காலத்தில் நீங்கள் செய்த தேர்வுகளின் விளைவாகும்.


  • உங்கள் எண்ணங்களுக்கு இடையே உள்ள அந்த அமைதியான இடைவெளிதான் அண்ட மனதுக்கான உங்கள் ஜன்னல்.


  • மகிழ்ச்சியான நினைவுகளை எண்ணிப் பார்ப்பது உண்மையிலேயே மூளையில் நேர்மறையான இரசாயன மாற்றத்தை உருவாக்குகிறது, இது நேர்மறையான உடல் மற்றும் உளவியல் நன்மைகளைத் தூண்டுகிறது.


  • செயல் இல்லாத அன்பு அர்த்தமற்றது மற்றும் அன்பு இல்லாத செயல் பொருத்தமற்றது.


  • உண்மையைத் தேடுபவர்களுடன் நடந்து செல்லுங்கள். அதைக் கண்டுபிடித்ததாக நினைப்பவர்களிடமிருந்து விலகி ஓடுங்கள்.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.

iOS App Link

Android App Link