குவென்டின் டரான்டினோவின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

குவென்டின் டரான்டினோவின் பொன்மொழிகள்

Quentin Jerome Tarantino

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும் மற்றும் நடிகரும்தான் குவென்டின் டரான்டினோ (Quentin Tarantino). தனது மாறுபட்ட திரைக்கதைகளின் மூலமும் வித்தியாசமான திரைப்படங்களின் மூலமும் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவரது பல திரைப்படங்கள் ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளன.

மேலும் இவரின் கில் பில் (Kill Bill), ஜாங்கோ அன்ச்செய்ன்ட் (Django Unchained) போன்ற படங்கள் மிகச்சிறந்த திரைப்படங்களாகும் மற்றும் வசூலையும் வாரிக்குவித்துள்ளன. சிறு வயதிலேயே நடிப்பு மேல் இருந்த ஆர்வத்தால் பள்ளியை விட்டு விலகி நடிப்பு கற்றுக்கொண்டார். பின்பு திரைப்பட இயக்கம் மேல் ஆர்வம் வர நடிப்பைப் கைவிட்டு இயக்குனர் ஆனார். திரைத்துறை மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு குவென்டின் டரான்டினோவின் கருத்துகள் நிச்சயம் உதவிகரமாக அமையும்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link



Quentin Tarantino quotes in Tamil


  • நீங்கள் திரைப்படங்களை விரும்பினால் மட்டும் போதும், உங்களால் ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்க முடியும்.


  • ஒரு கலைஞரின் வாழ்க்கையில் தோல்வி பெரும் வெகுமதிகளைத் தருகிறது.


  • நிஜ வாழ்க்கையில் யாரும் மோசமானவர்கள் இல்லை. ஒவ்வொருவருக்கும் தங்களது சொந்த பார்வை இருக்கிறது.


  • நீங்கள் திரைப்படப் பள்ளிக்குச் சென்றீர்களா என்று மக்கள் என்னிடம் கேட்கும்போது, இல்லை நான் படங்கள் பார்க்கச் சென்றேன் என்று அவர்களிடம் கூறுகிறேன்.


  • நான் என் கதாபாத்திரங்களை மதிப்பிடுவதில்லை, அவர்களை மதிப்பிடுவது என் வேலை இல்லை. அவர்களை மரியாதையுடன் நடத்துவதும், அவர்களின் பார்வையில் இருந்து அதைப் பார்ப்பதுமே எனது வேலை.


  • என்னைப் பொறுத்தவரை, திரைப்படங்களும் இசையும் கைகோர்த்துச் செல்கின்றன. நான் ஒரு திரைக்கதையை எழுதும் போது, நான் செய்யும் முதல் காரியங்களில் ஒன்று, தொடக்கக் காட்சிக்காக நான் இசைக்கப் போகும் இசையைக் கண்டுபிடிப்பதுதான்.


  • ஒரு மில்லியன் மக்கள் எனது திரைப்படத்தைப் பார்த்தால், அவர்கள் ஒரு மில்லியன் வெவ்வேறு திரைப்படங்களைப் பார்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.


  • நான் எப்படி கடவுளை நம்புகிறேன் என்று நான் உங்களுக்கு சொல்லப்போவதில்லை, ஆனால் நான் கடவுளை நம்புகிறேன்.


  • எனது பதில்கள் உங்களைப் பயமுறுத்தினால், நீங்கள் பயங்கரமான கேள்விகளைக் கேட்பதை நிறுத்த வேண்டும்.


  • நான் வரலாற்றை நேசித்தேன், ஏனெனில் என்னைப் பொறுத்தவரை வரலாறு ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல இருந்தது.


  • என் பலங்களில் ஒன்று நான் கதைசொல்லும் விதம் என்று நான் நினைக்கிறேன்.


  • உங்களால் கணினியில் கவிதை எழுத முடியாது.

 

  • நான் உருவாக்கும் ஒவ்வொரு திரைப்படமும் பணம் சம்பாதிப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் என் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்கள் தங்கள் பணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

 

  • நான் முதல் முறையாக சிறைக்குச் செல்லும்போது ஒருவித உற்சாகமாக இருந்தேன், மேலும் சில சிறந்த உரையாடல்களையும் கற்றுக்கொண்டேன்.

 

  • ஒரு நாவலாசிரியராக இருப்பதற்கு எனக்கு தேவையானது ஒரு பேனா மற்றும் ஒரு துண்டு காகிதம் மட்டுமே.

 

  • நான் எழுதும் விதத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், நான் அதை நன்றாக செய்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் நான் ஒருபோதும் என்னை ஒரு எழுத்தாளராகக் கருதவில்லை.

 

  • நான் கதாபாத்திரங்களை எழுதும் போது உண்மையில் நான் அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறுகிறேன்.

 

  • என் மனதில் நான் ஒரு வரலாற்றாசிரியர்.

 

  • திரைப்படம் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டாலும், அது விருதை வென்றாலும் கூட, அது திரைப்படத்தை சிறப்பானதாக்காது, அதுபோலவே புறக்கணிக்கப்பட்டாலும் அது திரைப்படத்தை மோசமாக்காது.

 

  • ஒரு நடிகராக நான் கற்றுக்கொண்ட அனைத்தையும், நான் எழுதுவதற்குப் பயன்படுத்தினேன்.

 

  • நான் உண்மையில் என்னை ஒரு எழுத்தாளராகக் கருதினால், நான் திரைக்கதைகளை எழுதி இருக்க மாட்டேன். நான் நாவல்களை எழுதி இருப்பேன்.


உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.